இயற்கை தழுவிய கற்பனைகளாலும் அதிகாரத்தை விரும்பாத அன்பினாலும் நிறையும் பெண் உணர்வுகளே பஹீமாவின் கவிதைகளது இயல்பாய் இருக்கிறது. போர்வெறி கொண்ட ராஜாக்களது அதிகார [அழிவு] அரசியலுக்கு எதிராய் அல்லது மாற்றாய் அன்பை, நிம்மதியை, மாபெரும் கருணையை தன்னோடு எடுத்துச்செல்ல விரும்புகின்றன அவரது கவிதைகள். ‘கின்னரர் தம் இசையிழந்த நிலமெங்கும்’ தாம் பெற்றெடுத்தவர்களைப் பறிகொடுத்த பெண்களின் ஒப்பாரி அலைந்துகொண்டிருப்பதை, தனக்கு வரம்புகளிடும் ஆக்கிரமிப்பாளர்களது கிரீடங்களை மறுத்தவாறு, அவர் பாடுகிறார். அவரது சொற்களில் இருக்கிற சகோதரத்துவமும் அன்பும் அதிகாரமற்ற உலகிற்கான அழைப்பாக ஒலிக்கின்றன.
வானொலி, தொலைக்காட்சி, மேடை, திரைப் படக்கலைஞர் நேர்முக வர்ணனையாளர் திரைப்பட இயக்குனர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு. கே.எஸ்.பாலச்சந்திரன், மிகச்சிறந்த வானொலி மற்றும், மேடை நாடகங்களையும் படைத்த எழுத்தாளர் இவரது எழுத்தாற்றல் நாவல் இலக்கியத்துறையிலும் காத்திரமாய் வெளிப்பட்டுள்ளது.கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல்ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு.
-பி எச் அப்துல் ஹமீத்
கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன. காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரபாவின் எழுத்துகளில் ஒரு எள்ளல் சுவையிருக்கும். அதையும் ஆங்காங்கே தூவி விட்டிருக்கிறார். நீயும் போய்ப் பார் இந்த இடங்களை எனச் சொல்லாமல் சொல்லும் வர்ணனைகள் அவை.
-எஸ். எழில்வேந்தன்
போர் தின்ற சனங்களின் கதை
அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.
-ஆனந்த விகடன்
இரண்டாம்பதிப்பு ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் ஓவியங்களோடு வெளியாகியிருக்கிறது.
அரசியற் தீர்க்கதரிசனங்கள், இராணுவ வெற்றிகளுக்கு அப்பால், போரினுள் அன்பையும் கருணையையும் வேண்டும் மனித இனத்தின் குரலாக, விரட்டப்படும் சனங்களின் அவலத்தின் சிறு ஒலிப்பாக கருணாகரனின் கவிதைகள் உள்ளன. வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்கு முன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற யுத்த காலத்தினில் வெளிவந்தது.
பெரும்பான்மையாய்ப் புலம் பெயர்ந்தவர்களையே கொண்டிருக்கிற இத்தொகுதி உருவாகிப் பதிப்பாக்கப்படும் 2003 – 2009 காலப் பகுதிகளில் ‘இலங்கையுள்” இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள், யுத்த நிலத்துக்கு ‘வெளியில்’ வாழும் இப் பெண்களது எழுத்திலும் பதிவாகியிருக்கின்றன. தமது நிலத்தினதும், அந் நிலமிருந்து பெயர்ந்து திரியும் தேசங்களினதும் நிகழ்காலத்தை, தமதான எல்லைகளுடன், இந்தக் கவிதைகள் பாடுகின்றன.
ஈழவிடுதலைப்போர் இறுதியில் பெரும் மக்கள் படுகொலையில் போய் முடிந்தபிறகு- அதன் காரண காரியங்கள், அரசியல் இராணுவப்பிழைகள் புலிகளின் செயற்பாடுகள் என எல்லாவற்றையும் ஆழமான உரையாடல் மூலம் நம் முன் நிறுத்துகிறார்கள். தியாகு ஷோபா சக்தி இருவரின் பேச்சும் பல உண்மைகளை முன்வைக்கிறது.ஈழத்தில் புதிய அரசியலைக் கண்டெடுக்க வேண்டியதன் அவசியம் புரிகிற படைப்பு.
– ஆனந்தவிகடன்
ஈழத்தமிழர்களிடம் நிறையக் கதை சொல்லிகள் இருக்கிறார்கள். காலம் தோறும் கதைகள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன தீராமல். சிலவேளைகளில் பெருகும் கதைகளே கதை சொல்லியைத் தின்றுவிடுவதுமுண்டு. அதனால் தானோ என்னவோ சொல்லப்படாக்கதைகள் பெருகிக் கொண்டேயிருக்கும் சமூகம் ஈழத்தமிழர்களுடையதாகியது. இயல்பிலேயே தமக்குள்ளான இறுகிய மனோபாவமும், சொற்கள் சாவை அழைத்து வரக்கூடியதாய்த் தொடர்ந்து வரும் அரசியற் சூழலும் சொல்லப்படாக் கதைகளைச் சமைத்தபடியிருக்கின்றன ஈழத்தமிழ்ச் சமூகத்திடம். ஆயினும் அந்தச் சூழலே புதிய கதை சொல்லிகளையும் உருவாக்கியபடியிருக்கிறது. காலம் தோறும் புதிய புதிய கதைசொல்லிகள் துயர்மிகும் …
இளம் படைப்பாளி, த.அகிலன் எழுதியுள்ள மரணத்தின் வாசனை என்ற அருமையானதொரு சிறுகதைத் தொகுப்பு நூலொன்று வெளிவந்துள்ளது. “போர் தின்ற சனங்களின் கதை” என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் த.அகிலன், ஈழ விடுதலைப் போரின் ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 1983இல் வடபுலத்தில் பிறந்தவர். மரணத்துள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இன்று கொள்ளத்தக்கவர். தான் புலம்பெயர்ந்து வந்தபின்னர், உறவினருடன் அவ்வப்போது மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களினூடாகத் தன் செவிகளுக்குள் வந்துசேர்ந்த பன்னிரண்டு மரணச்செய்திகளின் வாயிலாக விரியும் உறவின் பரிமாணமே இச்சிறுகதைகளாகும். ஒவ்வொரு …
“சித்தாந்தமாய், சிந்தனையாய், கருத்தியலின் மொழியாய், கருவியின் குறியாய் களத்தினில் வழிந்த உயிராய், நிலத்தினில் கிடந்த உடலாய் என்று எல்லா விதங்களிலுமாய் நாங்கள் …
ஈழத்தின் அகோரமான போர்ச்சூழலில் உங்களின் வாழ்வின் ஆரம்பம் கழிந்திருக்கின்றது, அந்த வகையில் உங்களின் வாழ்வியலின் அந்த ஆரம்ப நாட்கள் குறித்து?
நான் கிளிநொச்சியில் தான் பிறந்தேன், …
நட்பு, பகைமை, குரோதம், நம்பிக்கைத் துரோகம், ஆட்சிக் கவிழ்ப்பு, நில ஆக்கிரமிப்பு, அரச பயங்கரவாதம். ஒரு யுத்த பூமியில் இவையெல்லாம் சர்வ சாதாரணம். உலகமெங்குமான …
அப்பால் தமிழ் பதிப்பகத்தால் சில நூல்கள் வெளியிடப் பட்டிருக்கின்றன. ஆனால் அப்பால் தமிழ் தளத்தில் வெளிவந்த படைப்பொன்று நூல்வடிவம் பெறுவது இதுதான் முதல்தடவை. மரணத்தின் வாசனை எனத் தொடராக த. அகிலனால் எழுதப்பட்ட இந்த படைப்புகளுக்கு முன்னுரை …