கரையைத் தேடும் கட்டு மரங்கள்

நாவல்
கே.எஸ் பாலச்சந்திரன்
வடலி வெளியீடு ஆகஸ்ட் 2009
ISBN 9788190840507
பக்கம் 312

ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு இது. புலம் பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் நினைவுகளைச் சுமந்து வாழும் ஒரு படைப்பாளனின் நினைவுச் சித்திரம்.

வானொலி, தொலைக்காட்சி, மேடை, திரைப் படக்கலைஞர் நேர்முக வர்ணனையாளர் திரைப்பட இயக்குனர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு. கே.எஸ்.பாலச்சந்திரன், மிகச்சிறந்த வானொலி மற்றும், மேடை நாடகங்களையும் படைத்த எழுத்தாளர் தன் எழுத்தால், பயன்படுத்தும் சொற்களால், வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவனே ஒரு சிறந்த எழுத்தாளனாக முடியும். இவரது எழுத்துக்களுக்கு அவ் ஆற்றல் உண்டு.

இவரது எழுத்தாற்றல் நாவல் இலக்கியத்துறையிலும் காத்திரமாய் வெளிப்பட்டுள்ளது. கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் படைத்த, கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது பெயரும் வரலாற்றில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்.

பி எச் அப்துல் ஹமீத்


Price: 17.90 $