காஷ்மீர்

காஷ்மீர் என்ன நடக்குது அங்கே

பக்கங்கள் - 200

அ.மார்க்ஸ்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வெளியீடு

 

எல்லை தாண்டிய பயங்கரவாதம் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் என இந்திய அரசியல் வாதிகள் முன்வைக்கின்றனர். இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் வேர்கள் காஷ்மீர்ப் பிரச்சினையில் பதிந்துள்ளதை நாம் அறிவோம்.

'காஷ்மீர்ப்பிரச்சினை' என்பது உண்மையில் ”காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரைத் தன்னுடன் இணைத்துக்கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை” என்பதன் சுருக்கமே.

காஷ்மீர்ப்பிரச்சினையின் வரலாற்றை, அங்கு தீவிரவாதம் உருப்பெற்றதில் இந்திய அரசின் பங்கை, தன் நேரடிக் கள அனுபவங்களுடன் இணைந்து ஒரு புனைவுக்குரிய விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறார் அ.மார்க்ஸ்.


Price: 9.90 $