இரு சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வெளிவருகின்ற யோ.கர்ணனின் மூன்றாவது புத்தகம். எத்திசையென்று இன்றி மரணம் விதியாக நின்ற யுத்த நிலத்திலிருந்து பொருளாதார பலம் – அதிகார பலம் – உடற் பலம் இன்ன பிற வலிமையுடன் தப்பிச் செல்ல முடிகிறவர்கள் மற்றும் அத்தகையை பலங்களுள் அடங்காதவர்களது தப்ப முனையும் தப்பவியலாப் பயணத்தை விபரிக்கிறது கொலம்பசின் வரைபடம். கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட இவ் அனுபவங்களை அச் சூழலிலிருந்து வந்தவரைத் தவிர வேறு யார் தான் எழுதிவிடமுடியும்? கொலைக்குற்ற சாட்சியங்களாய் தொடர்பூடகங்களில் பதிவான நிர்வாண உடல்கள் – அப்பாவிச் சனங்களது – போராடியவர்களது எனப் பதிவான சடலங்களுக்குப் பின்னாலுள்ள உயிர்-முகங்களை பதிவுசெய்கிறது. அம் முகங்களை எதிர்கொள்ள முடியாதவாறு தோற்றுப் போயுள்ளது காலம். போரின் இறுதிக் காட்சிகளின் யதார்த்தத்தை அறிய விரும்புகிறவர்கள் படிக்க வேண்டியதொரு பதிவு.
Reviews
There are no reviews yet.