யோ.கர்ணன் ஒரு அற்புதமான கதைசொல்லி. ஈழத்தமிழின் இயல்பான பேச்சுமொழியினூடு விரியும் இவரது கதைகளில் இளையோடிக்கொண்டிருக்கும் எள்ளல் துயர் மிகுந்தது. அவரது துயரங்கள் அனைத்தையும், கடக்கவியலா வாழ்வின் சுமைகள் அனைத்தையும் தனது எள்ளல் மிகும் தன் மொழியினூடே இறக்கி வைக்கிறார். ஆனாலும் யோ.கர்ணனது கதைகளின் ஆன்மாவாய் இயங்குவது ‘மெய்’ அவரது சொற்களில் இருக்கும் உண்மையே அவரது கதைகளின் ஆதாரம்.
ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் நேரடி அனுபவம் தொடர்பில் வெளிவருகின்ற முதல்தொகுதி இது.
இயற்கை தழுவிய கற்பனைகளாலும் அதிகாரத்தை விரும்பாத அன்பினாலும் நிறையும் பெண் உணர்வுகளே பஹீமாவின் கவிதைகளது இயல்பாய் இருக்கிறது. போர்வெறி கொண்ட ராஜாக்களது அதிகார [அழிவு] அரசியலுக்கு எதிராய் அல்லது மாற்றாய் அன்பை, நிம்மதியை, மாபெரும் கருணையை தன்னோடு எடுத்துச்செல்ல விரும்புகின்றன அவரது கவிதைகள். ‘கின்னரர் தம் இசையிழந்த நிலமெங்கும்’ தாம் பெற்றெடுத்தவர்களைப் பறிகொடுத்த பெண்களின் ஒப்பாரி அலைந்துகொண்டிருப்பதை, தனக்கு வரம்புகளிடும் ஆக்கிரமிப்பாளர்களது கிரீடங்களை மறுத்தவாறு, அவர் பாடுகிறார். அவரது சொற்களில் இருக்கிற சகோதரத்துவமும் அன்பும் அதிகாரமற்ற உலகிற்கான அழைப்பாக ஒலிக்கின்றன.
வானொலி, தொலைக்காட்சி, மேடை, திரைப் படக்கலைஞர் நேர்முக வர்ணனையாளர் திரைப்பட இயக்குனர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு. கே.எஸ்.பாலச்சந்திரன், மிகச்சிறந்த வானொலி மற்றும், மேடை நாடகங்களையும் படைத்த எழுத்தாளர் இவரது எழுத்தாற்றல் நாவல் இலக்கியத்துறையிலும் காத்திரமாய் வெளிப்பட்டுள்ளது.கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல்ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு.
-பி எச் அப்துல் ஹமீத்
கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன. காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரபாவின் எழுத்துகளில் ஒரு எள்ளல் சுவையிருக்கும். அதையும் ஆங்காங்கே தூவி விட்டிருக்கிறார். நீயும் போய்ப் பார் இந்த இடங்களை எனச் சொல்லாமல் சொல்லும் வர்ணனைகள் அவை.
-எஸ். எழில்வேந்தன்
போர் தின்ற சனங்களின் கதை
அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.
-ஆனந்த விகடன்
இரண்டாம்பதிப்பு ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் ஓவியங்களோடு வெளியாகியிருக்கிறது.
அரசியற் தீர்க்கதரிசனங்கள், இராணுவ வெற்றிகளுக்கு அப்பால், போரினுள் அன்பையும் கருணையையும் வேண்டும் மனித இனத்தின் குரலாக, விரட்டப்படும் சனங்களின் அவலத்தின் சிறு ஒலிப்பாக கருணாகரனின் கவிதைகள் உள்ளன. வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்கு முன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற யுத்த காலத்தினில் வெளிவந்தது.
பெரும்பான்மையாய்ப் புலம் பெயர்ந்தவர்களையே கொண்டிருக்கிற இத்தொகுதி உருவாகிப் பதிப்பாக்கப்படும் 2003 – 2009 காலப் பகுதிகளில் ‘இலங்கையுள்” இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள், யுத்த நிலத்துக்கு ‘வெளியில்’ வாழும் இப் பெண்களது எழுத்திலும் பதிவாகியிருக்கின்றன. தமது நிலத்தினதும், அந் நிலமிருந்து பெயர்ந்து திரியும் தேசங்களினதும் நிகழ்காலத்தை, தமதான எல்லைகளுடன், இந்தக் கவிதைகள் பாடுகின்றன.
ஈழவிடுதலைப்போர் இறுதியில் பெரும் மக்கள் படுகொலையில் போய் முடிந்தபிறகு- அதன் காரண காரியங்கள், அரசியல் இராணுவப்பிழைகள் புலிகளின் செயற்பாடுகள் என எல்லாவற்றையும் ஆழமான உரையாடல் மூலம் நம் முன் நிறுத்துகிறார்கள். தியாகு ஷோபா சக்தி இருவரின் பேச்சும் பல உண்மைகளை முன்வைக்கிறது.ஈழத்தில் புதிய அரசியலைக் கண்டெடுக்க வேண்டியதன் அவசியம் புரிகிற படைப்பு.
– ஆனந்தவிகடன்
கடந்த கால் நூற்றாண்டுகளுக்குமேல் தமிழ்மொழியில் எழுதப்பட்ட இலக்கியப்படைப்புகளில் உயிரோட்டமுள்ள படைப்புகள், அன்றாட வாழ்வின் நெருக்கடிகளை பாசாங்கு இல்லாமல் எழுதிய படைப்புகள் என்று ஈழத்து படைப்புகளை மட்டுமே சொல்ல முடியும். ஈழத்தில்தான் வாழ்வதற்கான நெருக்கடிகள் இருந்தன. அடுத்த கணத்தில் உயிருடன் இருப்போமா, யார் உயிருடன் இருப்பார்கள், யார் இறப்பார்கள் என்ற நிச்சயமில்லாத வாழ்க்கை, அடுத்த கணத்தை உயிருடனிருந்து எப்படி எதிர்க்கொள்வது என்ற சவால் …
கவிஞர்.கருணாகரன் நமக்குத் தந்திருக்கும் மூன்றாவது கவிதை நூல் ‘பலிஆடு’ ஆகும்.
‘..உனனை என்னுள் திணிப்பதையும்
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன்
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும்
என் பாடலை நானே இசைப்பதிலும்
ஆனந்தமுண்டல்லவா?…’
கவிஞர் முதல் நூலின் முதல் கவிதையுடன் தன்னை அறிமுகம் செய்தாலும் கவிஞருக்கு அறிமுகம் தேவையற்றது. ஏற்கனவே ‘வெளிச்சம்’ சஞ்சிகை மூலமும், தமிழீழ தேசிய தொலைக்காட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உலக இலக்கியங்களில் அதி …
1. அபராதி ( கவிதைத் தொகுதி)
ஆசிரியர் : ஃபஹீமா ஜஹான்
அறிமுக உரை :மயூ மனோ
2. கொலை நிலம் ( முரண் அரசியல் உரையாடல்)
உரையாடியவர்கள் : ஷோபாசக்தி – …
சம கால தமிழ் எதிர்ப்பரசியலின் மனநிலையானது பாரதூரமான அளவுக்கு பிளவுண்டிருக்கிறது. அது நவீன உலகத்தின் நிகழ்ச்சிப் போக்கில் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்ல, கடந்து சென்ற வரலாறுகளையும் தமக்கு …

ஈழத்தின் மூத்த படைப்பாளி கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கு தமிழகத்தின் அமுதன் அறக்கட்டளை சார்பாக அமுதன் அடிகள் இலக்கியவிருது 2009 வழங்கப்பட்டுள்ளது. 2009 ம் ஆண்டில் வடலி வெளியீடாக வெளியிடப்பட்ட கரையைத் தேடும் கட்டுமரங்கள் நாவலுக்காகவே …
வடலியின் வெளியீடுகளான ஆறு நூல்களின் நூல் அறிமுகவிழா கொழும்பில் 16.10.2010 அன்று கொழும்புத்தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. வடலி வெளியீட்டினால் இது வரை காலமும் வெளியிடப்பட்டு புத்தகங்களின் அரசியல் காரணமாகவும் அவற்றின்பேசு பொருட்கள் இன்ன பிற …
யுத்தத்தில் – விடுதலைப் போராட்டத்தில் – ஒரு காலைப்பறிகொடுத்தவர் யோ. கர்ணன். யுத்தம் அவருடைய இளமைப் பருவத்தைத் தின்றுவிட்டது. அவருடைய கல்வியை, அவருடைய தொழில்வாய்ப்புகளை, அவருக்கான எதிர்காலத்தை என எல்லாவற்றையும் அது தின்று தீர்த்துள்ளது. அவர் …
ஈழத்தமிழர்களிடம் நிறையக் கதை சொல்லிகள் இருக்கிறார்கள். காலம் தோறும் கதைகள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன தீராமல். சிலவேளைகளில் பெருகும் கதைகளே கதை சொல்லியைத் தின்றுவிடுவதுமுண்டு. அதனால் தானோ என்னவோ சொல்லப்படாக்கதைகள் பெருகிக் கொண்டேயிருக்கும் சமூகம் ஈழத்தமிழர்களுடையதாகியது. …
“சித்தாந்தமாய், சிந்தனையாய், கருத்தியலின் மொழியாய், கருவியின் குறியாய் களத்தினில் வழிந்த உயிராய், நிலத்தினில் கிடந்த உடலாய் என்று எல்லா விதங்களிலுமாய் நாங்கள் …