ஈழ நிலத்தின் போர் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுக் கொண்டிருந்ததாலும் துயர்களைச் தின்று செ ரித்த நிலத்திடம் சொல்வதற்கு ஏராளம் கதைகள் உண்டு. வரலாறு முழுவதும் ஆக்கிரமிப்புக்களின் போதெல்லாம் வீழ்வதும் பின் எழுவதுமாயிருக் கும் வன்னிக் கிராமமொன்றின் கதையிது. தொல் தெ ய்வ ங்களின் கருணையும் உக் கிரமும் உள்ளுறைந்திருக்கும் கதைகளும் மனிதர்களும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்த னின் முதல் நாவல். தொன்மத்தின் பாடல்களாலும், நம்பிக்கைகளாலும் பின்னப்பட்டிருக்கும் ஆதி நிலத்தின் நிகழ்கால மனிதர்களின் பாடுகளை , வைராக் கியத்தை , தியாகத்தை , வே ட்கையை போர் ஊடறுத்த அன்றாட த்தை , எங்கள் மனமசையச் சொல்லுகின்றன யதார்த்தனின் சொற்கள்.
…..
யதார்த்தன் (எ) பிரதீப் குணரட்ணம் (1993) இலங்கையின் யாழ்பாணத்திலுள்ள சரசாலை எனும் கிராமத்தில் பிறந்தவர். சமூக செயற்பாட்டாளர். மரபுரிமைகள் தொடர்பான ‘தொன்ம யாத்திரை’ எனும் இதழின் ஆசிரியர்களில் ஒருவர். மொழியியல் துறையில் தனது இளமானிப் பட்டப்படிப்பினை நிறைவுசெய்த இவர், சமூகவியல் துறையில் முதுமானிப் பட்டப்படிப்பினைப் பேராதனைப் பல்கலைகழகத்தில் தொடர்ந்து வருகிறார். தொடர்ச்சியாக வரலாறு, மரபுரிமைகள், சாதியம் மற்றும் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பாக எழுதி வருகிறார்.
‘மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ (2017) இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. நகுலாத்தை இவரது முதல் நாவல்.
vadaly –
சில நேரங்களில் Visualsஆக, பலநேரங்களில் ஆற்றொழுக்கு நடையாக விரியும் மொழிநடை, தொன்மத்தையும் நவீனத்தையும் இணைக்கும் கதைசொல்லல், சாரங்கன் போல, செயல்களை வைத்தே அந்தந்தக் கதாபாத்திரத்தைத் தெளிவாக சித்தரித்திருப்பது, விடுதலைப்புலிகளின் சில போர்கள் குறித்த நீண்ட வர்ணனைகள் வந்த போதிலும் எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி முன்னால் நிற்கும் வன்னி கிராமத்தின் வாழ்வு என்று பல விஷயங்கள் இந்த நாவலில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன. அரசியல் பார்வையைத் தாண்டி, இது ஒரு நல்ல நாவல். இலக்கிய வாசகர்கள் தவறாது வாசிக்க வேண்டிய நூல்.
– Saravanan Manickavasagam
https://saravananmanickavasagam.in/2022/12/11/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/
vadaly –
அசுராவின் உரை : நகுலாத்தை – யதார்த்தன்
வடலி வெளியீடான மூன்று நூல்களின் அறிமுக-விமர்சன நிகழ்வின்
வீடியோப் பதிவு
05-03-2023 | பாரிஸ்
https://www.youtube.com/watch?v=8t3Xsk97cRw
vadaly –
ஈழப்பரப்பில் கடந்து சென்ற நாற்பது, ஐம்பது நிறம் பூக்காத இக்காலத்தை மையமாகக் கொண்டெழுதப்படும்
எவ்வகையான இலக்கிய வகையராக்களாக இருந்தாலும் பேரினவாதத்தையும், போரையும் தவிர்த்துவிட்டு எழுதப்பட முடியாத ஒன்றாகவே எண்ணுகிறேன்.
அண்மித்து
இவ்வகையான படைப்புகளுக்கு சில எதிர்ப்புக் குரல்களும் எழுகின்றன. அவர்களது குற்றச்சாட்டுக்களாக; தமிழ் நாட்டிலுள்ள ஈழ ஆதரவுத்தளத்தினை கவர்ந்து கொள்வதற்கான கழிவிரக்க குரல்களாக இருக்கின்றன, ஒரே சரக்கே மாறி மாறி பேசப்படுகின்றன என்று முன்வைக்கப் படுகிறது. ஆனால் இவற்றை ஆக்கப்பூர்வமான குற்றக் காட்டுக்களாக நான் காணவில்லை. போரும், அழிவும், அதனால் ஏற்பட்ட அனந்தரமும் முற்று முழுதாக எழுதித் தீர்க்கப்பட்டு விட்டதா என்ற கேள்விக்கு யாரால் ‘முடிந்து விட்டது’ என்று சொல்ல முடியும்?
– ஹனீஸ் மொஹம்மத், இலங்கை.-
https://bookday.in/nagulathai-novel-book-by-ythaarthan-book-review-by-hanish-mohammed/
vadaly –
ஓசூர் FA the FINANCE ACADEMYயின் ஆதரவுடன் எழுத்தாளர் பா வெங்கடேசன் பிரதி மாதம் ஒருங்கிணைக்கும் ‘புரவி’ இலக்கிய கூடுகையின் நான்காம் நிகழ்வு இரண்டு அமர்வுகளாக ஜனவரி 29, 2023 அன்று மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை FA அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. முதல் அமர்வில் எழுத்தாளர் யதார்த்தனின் ‘நகுலாத்தை’ புதினத்தின் மீதான உரைகள் முகிலன், ரமேஷ் கல்யாண், வாணியம்பாடி சுரேஷ், சிவபிரசாத் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டன.
https://www.youtube.com/watch?v=Rw4A_wBOyiI
Feb 21/23
vadaly –
எங்கள் வாழ்வில் இயற்கை வளங்களின் வரலாற்றுப் பங்கை, எங்களுடனான வரலாற்று உறவை அறியாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு (ecological conservation) அல்லது சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (ecological restoration) பற்றி யாரும் பேச முடியாது. ஏன், எங்களின் அரசியல் பற்றியே பேசமுடியாது. வட மாகாணத்தில் இயற்கை வளங்கள் மற்றும் சூழலியல் மறுசீரமைப்பு பற்றி ஆய்வு செய்யும், கற்கும், எவரும் “நகுலாத்தை”யை புறக்கணிக்க முடியாது.
– Ravi Ponnudurai
vadaly –
மிக நீண்ட காலத்தின் பின் வாசித்த அற்புதமான நாவல்.
This is a Tamil novel that surpasses all Tamil novels dealing with nature, forests, hunting, healing and power. And, Leonard Wolfe cannot compete!
காடும் வாழ்வும் பற்றிய செங்கை ஆழியான், ஜெயமோகன், அ. பாலமனோகரன், லெயனார்ட் வூல்ஃப், ஜாக் லண்டன், ஜிம் கோர்பெட், போன்றோரின் எழுத்துக்களை மீறிய உன்னதம் இது.
– சேரன்